உலகப்போதை விழிப்புணர்வு தினம் நிகழ்வு
உலகப்போதை விழிப்புணர்வு தின ஜோதி ஓட்ட நிகழ்வு இன்று (26-06-2023) காலை 7:45 மணியளவில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி வளாகத்திலிருந்து ஆரம்பமானது. மருத்துவக் கல்லூரி முதல்வர் திரு.பிரின்ஸ் பயஸ் ஜோதியை ஏற்றினார். காவல் உதவி ஆய்வாளர் திருமதி.றோஸ்மேரி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பஞ்சாயத்து கவுன்சிலர் திருமதி. மோனிகா, பெல்ஃபீல்டு பள்ளி தாளாளர் திரு.ஜி.ரஸ்கின் ராய், பெல்ஃபீல்டு பள்ளி முதல்ர் டாக்டர் ஜேன் கேத்தரின் ரஸ்கின், பெல்ஃபீல்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.